13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்க வலியுறுத்தி வடக்கில் ஊர்திப் பவனி

0
276
Article Top Ad

ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்திப் பவனி, நேற்று புதன்கிழமை இரவு வவுனியாவைச் சென்றடைந்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 6 கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி இந்தியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில்,

ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரித்து, சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் யாழ்ப்பாணம் நல்லூரடியில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.30 இற்கு மாபெரும் பேரணி ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக, தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளான சமஸ்டி தீர்வை வலியுறுத்தியும், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கக் கோரியும் அலங்கரிக்கப்பட்ட ஊர்திப் பவனி நேற்று புதன்கிழமை மாங்குளம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பவனி மல்லாவி, விடத்தல் தீவு, மன்னார் ஆகிய பகுதிகளுக்குச் சென்று நேற்றிரவு வவுனியாவைச் சென்றடைந்தது.

இன்று வியாழக்கிழமை காலை வவுனியா நகரில் இருந்து புறப்பட்டு முல்லைத்தீவு நோக்கிச் சென்று அங்கிருந்து கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளது.