தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு

0
276
Article Top Ad

தமிழ்நாட்டில் நேற்று வியாழக்கிழமை மாத்திரம் 28 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 53 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் வரையான நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 2 இலட்சத்து 13 ஆயிரத்து 534 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமை போன்று சென்னையில் 5 ஆயிரத்து 591 பேரும், செங்கல்பட்டில் ஆயிரத்து 696 பேரும், கோயம்புத்தூரில் 3 ஆயிரத்து 629 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஈரோடு, சேலம், திருப்பூர், கொங்கு மண்டலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பெரம்பலூர், சிவகங்கை, வேலூர் போன்ற மாவட்டங்களில் தினசரி கொரோனா தொற்று குறைவாகவே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.