வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் திருத்தங்கள்

0
283
Article Top Ad

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறை தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் கடவுச்சீட்டைக் கொண்டுள்ளவர்கள் அவசியம் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் காப்புறுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

அவர்கள் இலங்கையில் நோய்வாய்ப்படும் பொழுது இந்த காப்புறுதி பெரும் உதவியாக அமையும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.