சுதந்திர தினத்தை புறக்கணிக்க கர்தினால் மல்கம் ரஞ்சித் தீர்மானித்தது ஏன்?

0
115
Article Top Ad

 

 

கத்தோலிக்க பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நாளை (04) நடைபெறும் தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப்பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ இன்று தெரிவித்தார்.

பொரளையிலுள்ள தேவாலயம் ஒன்றில் கைகுண்டு மீட்கப்பட்ட சம்பவம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் திருப்தியளிக்காமை காரணமாகவே பேராயர் இந்தத் தீர்மானத்தைமேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்