நெருக்கடியிலுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டுவர வழி என்ன?

0
336
Article Top Ad

 

 

குறுகிய காலத்தில் சீர்திருத்தங்களைச் செய்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வருமானங்களைத் திரட்டும் வழியைச் செய்யாவிட்டால் தற்போது நெருக்கடி நிலையிலுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு சாத்தியமில்லை என கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவிக்கின்றார்.

குளோப் தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்திடம் செல்வதற்கு தொடர்ந்தும் பின்னடிப்பது ஏன் என்பது தொடர்பாகவும் தனது கருத்துக்களை அவர் பகிர்ந்துகொண்டார்.