1000வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

0
357
Article Top Ad

ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தெரிவு செய்தார்.

இதனையடுத்துக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 43.5 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் நிதானமாக விளையாடிய ஹோல்டர் அரைச் சதம் அடித்தார்.

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய சஹால் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில், தலைவர் ரோஹித் ஷர்மா 60 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டத்தால், 21 புள்ளி 5 ஓவர்களில், இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம், ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.