சர்வதேச பயணிகளுக்கு அவுஸ்திரேலிய எல்லை திறப்பு

0
169
Article Top Ad

தடுப்பூசி பெற்ற சுற்றலா பயணிகள் மற்றும் ஏனைய விசா வைத்திருப்பவர்களுக்கு கடந்த இரண்டு அண்டுகளில் முதல் முறை அவுஸ்திரேலியா தனது எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளது.

‘நீங்கள் இரு முறை தடுப்பூசி பெற்றவராக இருந்தால், உங்களை வரவேற்க நாம் எதிபார்த்துள்ளோம்’ என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கல்வித்துறை உட்பட பல துறைகளுக்காகவும் வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி எல்லைகளை திறக்கும் அறிவிப்பை அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடுமையான எல்லை கட்டுப்பாடுகளை அமுல்படுத்திய நாடுகளில் ஒன்றாக அவுஸ்திரேலியா இருந்து வந்தது.