IPL ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனை வனிந்து ஹஸரங்க வசமானது

0
107
Article Top Ad

 

சனிக்கிழமை நடைபெற்ற இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளின் ஏல விற்பனையில், இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க, 10.75 கோடி இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளார்.

ரோயல் செலஞ்சர் பெங்களுர் அணிக்காக, வனிந்து ஹசரங்க இவ்வாறு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

பந்துவீச்சாளர் தரவரிசையில் உலகில் முதல் நிலையிலுள்ள ஹஸரங்கவை தமது அணிக்காக வாங்குவதற்கு ரோயல் சலெஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

இடையே ஏல விற்பனையாளர் சுகவீனமடைந்ததால் தாமதித்த ஏல நடவடிக்கையின் பின்னர் 1075 லட்சம் இந்திய ரூபாவிற்கு ஹஸரங்கவை பெங்களுர் வாங்கியது. இது இலங்கையின் நாணயமதிப்பில் 287 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையைச் சேர்ந்த வீரர் ஒருவர் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட தருணமாக இது அமைந்தது. இதற்கு முன்பாக மஹேல ஜயவர்த்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர்கள் என்ற சாதனையை தம்வசம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது