சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே கைது

0
133
Article Top Ad

சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வைத்தியரின் விளக்கமறியல் இடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொரளை அனைத்து புனிதர்களின் ஆலய வளாகத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் வைத்தியர் எஸ். ஹேரத் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.