ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரஞ்சன் ராமநாயக்க

0
286
Article Top Ad

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் ரஞ்சன் ராமநாயக்க ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுக்கு இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் அழைத்து வரப்பட்டுள்ளார்.

2015-2019 நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த அரசாங்கத்தில் ரஞ்சன் ராமநாயக்க இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.