எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 22 பேர் கைது

0
245
Article Top Ad

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நாகையைச் சேர்ந்த 22 மீனவர்களையும் அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கைதுசெய்து யாழ்ப்பாணம் – மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட 22 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.