இந்தியா – இலங்கை அணிகள் விளையாடிய பெங்களூர் மைதானம் சிறந்ததாக இல்லை – ஐசிசி மதிப்பீடு

0
128
Article Top Ad

இந்தியா – இலங்கை அணிகள் விளையாடிய பெங்களூர் மைதானத்தை சராசரிக்கும் குறைவாக ஐசிசி மதிப்பிட்டுள்ளது

இந்தியா – இலங்கை அணிகள் மோதிய 2 ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் கடந்த மார்ச் 12 ஆம் திகதி ஆரம்பமாகி 3 நாட்கள்  நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டி 3 நாளில் முடிவடைந்துவிட்டது.
இந்தப் போட்டியில் இரு அணிகளும் விளையாடிய பெங்களூர் மைதானத்தை சராசரிக்கும் குறைவாக ஐசிசி மதிப்பிட்டுள்ளது
இந்த போட்டியின்   நடுவர்  ஜவகல் ஸ்ரீநாத் கூறுகையில்;
முதல் நாளிலேயே மைதானம் நிறைய திருப்பங்களை அளித்தது, என் பார்வையில், இது துடுப்பு மற்றும் பந்திற்கு இடையேயான போட்டி அல்ல” என்று   கூறியுள்ளார் . இதனால் இந்தியா – இலங்கை அணிகள் விளையாடிய பெங்களூர் மைதானத்தை சராசரிக்கும் குறைவாக ஐசிசி மதிப்பிட்டுள்ளது.