அமைச்சரின் வாகன சாரதி கொலை – மற்றுமொருவர் கைது

0
258
Article Top Ad

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை பிற்பகல் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிசிரிவி காட்சிகள் மூலம் கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கடந்த 21ஆம் திகதி மாவித்தறை பகுதியில் வைத்து கத்தியால் குத்தி கொல்லப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் முன்னதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.