எரிபொருள், எரிவாயுவிற்காக மக்கள் தொடர்ந்தும் வரிசையில் காத்திருப்பு

0
255
Article Top Ad

37, 500 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று நாளை திங்கட்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது.

மேலும் ஒரு தொகை எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டை வந்தடையவுள்ளது.

இதுதவிர கடந்த வெள்ளிக்கிழமை 40, 000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டமையை அடுத்து குறித்த எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமையினை அவதானிக்க முடிந்தது.

எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு சென்ற மக்களுக்கு போதுமான எரிவாயு கிடைக்காமையினால் எரிவாயுவுக்கான வரிசையும் தொடர்கின்றது.

லிட்ரோ நிறுவனத்தினால் நாளாந்தம் சுமார் 120, 000 எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.