நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்

0
123
Article Top Ad

நாடு தழுவிய ரீதியில் இன்று சனிக்கிழமை மாலை 6 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை  அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் ஏனைய ஆவணங்களைப் பொலிஸ் ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.