புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்

0
159
Article Top Ad

புனித ரமழான் நோன்பு நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு இந்தத் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.