பொலிஸ் அதிகாரிகள் உட்பட 9 பேர் பலி!

0
148
Article Top Ad

இலங்கையில் ராஜபக்ச அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தின்போது இடம்பெற்ற கலவரத்தில் இதுவரையில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 41 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 61 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக 136 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.