மஹிந்த தங்கியுள்ள இடத்தை அறிவித்தார் பாதுகாப்பு செயலாளர்

0
136
Article Top Ad

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பாதுகாப்பு காரணங்களுக்காக திருகோணமலை கடற்படை கப்பல் துறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்ததன் பின்னர் அவர் செல்ல விரும்பும் இடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.