21ஆவது திருத்தம் குறித்து விவாதிக்க நாளை விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்!

0
113
Article Top Ad

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடல் நடத்த நாளை விசேட கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை மாலை 4.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறுமென பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை கடந்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்தார். அமைச்சரவையில் இதனை நிறைவேற்றுவதற்கு முன்னர் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டுமென பிரதமர் கூறியதற்கு அமைவாகவே நாளையத்தினம் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.