பாத்திமா ஆயிஷாவின் மரணம் ; நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது

0
105
Article Top Ad

பண்டாரகம, அட்டலுகம பகுதியில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சிறுமியை வேறு இடத்தில் வைத்து கொலை செய்து, அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வீசியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிறுமி ஆயிஷா அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு உணவு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நேற்று சென்றுள்ளார். எனினும் கடைக்குச் சென்று ஒரு மணித்தியாலத்தின் பின்னரும் அவர் வீடு திரும்பாததையடுத்து வீட்டார் அவரை தேடியுள்ளனர்.

சிறுமியின் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து நீண்ட நேரம் அவரை தேடியும் கிடைக்காததையடுத்து பொலிஸில் முறைப்பாடளித்தனர்.

இந்நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே குறித்த சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள அட்டலுகம – பெரியபள்ளி என்ற இடத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதியொன்றிலிருந்து கடந்த சனிக்கிழமை மாலை சடலமா மீட்க்கப்பட்டுள்ளார்.