தமிழக முதல்வருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு ; இலங்கைக்கு வருமாறு அழைப்பு!

0
110
Article Top Ad

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலினுக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்பு, சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவர் 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக முதல்வர் ஒருவரை சந்திப்பது இதுவே முதல் முறை என இந்தியாவில் உள்ள உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.