நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 29ம் திகதி!

0
91
Article Top Ad

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் 29ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 தினங்கள் மஹோற்சவம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இந்த விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது.விசேட கூட்டத்தில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பரிபாலன சபையினர், கடற்படையினர், பொலிஸார், வேலணை பிரதேச செயலாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.