அஸ்தமனத்தை நோக்கி ராஜபக்‌ஷ குடும்பத்தின் அரசியல்!

0
115
Article Top Ad

ராஜபக்‌ஷ குடும்பத்தை சேர்ந்த மற்றுமொருவர் எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெருக்கடி நிலைமையில் ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் கடந்த மே 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து ஜுன் 9 ஆம் திகதி பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்னுமொரு ராஜபக்‌ஷ எம்.பி பதவியை துறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ மற்றும் ஷசிந்திர ராஜபக்‌ஷ ஆகியோரோ தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இவர்களில் ஒருவரே பதவி விலகவுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.