21வது திருத்தம் குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல்!

0
98
Article Top Ad

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடலொன்று இன்று கோட்டை ஜனாதிபதி மாளிகையில் மாலை 4.00 மணிக்குநடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்போது, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் உரிய அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு அனைத்து தரப்பினருடனும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

21வது திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.