பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்னால் போராட்டம்!

0
103
Article Top Ad

கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்னால் போராட்டம் ஒன்று இடம்பெறுகிறது.

குறித்த போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளார்.

பேராட்டகாரர்கள் பிரதமர் தங்களை சந்திக்கும் வரை குறித்த இடத்தை விட்டு செல்லமாட்டோம் என தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், எதிர்ப்பு போராட்டம் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லம் அமைந்துள்ள கொழும்பு பிளவர் வீதியின் 5 ஆம் ஒழுங்கை முடப்பட்டுள்ளது.

போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் கடமையில் ஈடுப்பட்டுள்ளார்கள்