எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கிறது!

0
89
Article Top Ad

சமையல் எரிவாயு விலையை மீண்டும் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விலையை சிறு அளவில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 அல்லது அதனை அண்மித்த தொகையினால் விலையை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கொள்கலன் ஒன்றின் விலையை 5100 அல்லது அதனை அண்மித்த தொகையில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.