எரிபொருள் வரிசையில் மேலும் ஒருவர் மரணம்!

0
111
Article Top Ad

பயாகல ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் இருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் வரிசையில் இருந்த நபருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து உடனடியாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரடுவை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.