இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி விலகினார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடித்தார். அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.
ஆரம்பம் முதலே இந்திய அணியினர் அசத்தலாக பந்து வீசினர். தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர். அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்னும், டேவிட் வில்லி 21 ரன்னும், பிரைடன் கார்சே 15 ரன்னும், மொயீன் அலி 14 ரன்னும் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது. ரோஹித் சர்மா 76 ஓட்டங்களையும் தவான் 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.