இலங்கையில் சுமூகமான ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யுமாறு ஐ.நா. கோரிக்கை!

0
94
Article Top Ad

இலங்கையில் சுமூகமான ஆட்சி மாற்றத்தை உறுதி செய்வதற்கும், பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து வன்முறைச் செயல்களையும் தான் கண்டிப்பதாகவும் அதற்கு காரணமாவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் இலங்கை மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறேன் மற்றும் அரசாங்கத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கும், பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.