கோட்டாவுக்கு அமெரிக்கா விசா மறுப்பு ; தப்பிச்செல்லும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவு!

0
99
Article Top Ad

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் 15 வரையிலான அவரது நெருங்கிய குடும்ப உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.

அமெரிக்காவுக்கு செல்வதற்கு ஜனாதிபதி விசா விண்ணப்பித்த போதிலும் அமெரிக்க அதனை மறுத்துள்ளது. அதேவேளை, இலங்கை விமானபப்டையின் விமானங்கள் இந்திய மண்ணில் தரை இறங்குவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் விமான நிலைய அதிகாரிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்திருந்த ஜனாதிபதி மற்றும் உறவினர்கள் நேற்று திங்கட் கிழமை இரண்டு பெல் 412 ரக உலங்கு வானூர்தி மூலம் கொழும்பு ரத்மலான விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அங்கே, முப்படையினரின் தளபதிகளை சந்தித்துவிட்டு, மாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL225 ஊடாக டுபாய்க்கு அவர்கள் ஜனாதிபதியும் அவரது உறவினர்களும் அனைவரும் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்களை குடிவரவு பகுதிக்கு அவர்களின் கடவுசீட்டுக்களை ஸ்டாம் பண்ணுவதற்கு வருமாறு குடிவரவு அதிகாரிகள் நிர்ப்பந்தித்தனர். ஆனால், பாதுகாப்பு காரணங்கள் காரணமாக அந்த பகுதிக்கு செல்வதற்கு அவர்கள் மறுத்தனர். அதேநேரம் , விசேட மற்றும் அதி விசேட அதிதிகள் செல்லும் குடிவரவு பகுதியில் பணியாற்றும் அதிகாரிகள் சனிக்கிழமை இரவு முதல் தமது பணிகளை இடை நிறுத்தி இருந்தனர்.

அதேசமயம், ஜனாதிபதியை ஏற்றிக்கொண்டு சென்ற இலங்கை விமானப்படைக்கு சொந்தமான AN32 என்ற விமானம் இந்திய விமானம் நிலையம் ஒன்றில் தரை இறங்குவதற்கு இந்தியா மறுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக, இலங்கை விமானப்படை முகாம் ஒன்றில் ராஜபக்ஸ நேற்றைய இரவை கழித்தார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையை கோட்டபாய திறந்திருந்ததால், அமெரிக்க செல்லுவதற்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரின் மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் இன்னமும் அமெரிக்க பிரஜைகளே. ஆனால், அவர்கள் இன்னமும் அமெரிக்காவிலேயே வாழ்கின்றனர்.

அமெரிக்க குடியுரிமையை திறந்த ஒருவருக்கு மீண்டும் விசா வழங்க முடியாது என்றும் நெருங்கிய குடும்ப உறவினர் ஒருவரின் மரணம் அல்லது மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே விதிவிலக்காக விசா வழங்கப்படும் என்றும் அமெரிக்க தூதரகம் விளக்கம் அவருக்கு அளித்துள்ளது.

அவருக்கு விசா இல்லை என்பது மிகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் தலைவராக அவர் அங்கு செல்லலாம். ஆனால், தற்போதைய நிலைமைகள் வேறு ” என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால், ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ அண்மையில் அவரது அமெரிக்க கடவு சீட்டை தொலைத்திருந்த நிலையில் புதிதாக கடவுசீட்டை பெறுவதற்கு அமெரிக்க தூதரகம் உதவியிருக்கின்றது. சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகம் ஆர்பாட்டக்காரர்களினால் முற்றுகை இடப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதியும் பசிலும் தப்பி சென்றிருந்த நிலையில், பசில் அவரது கடவுசீட்டை அங்கு விட்டு சென்றிருந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் சில்க் பாதை ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பசில் மேற்கொண்ட முயற்சி குடிவரவு அதிகாரிகளினால் முறியடிக்கப்பட்டது.