நாடாளுமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற மோதலில் தோட்டாக்களுடன் காணாமல்போன துப்பாக்கி

0
111
Article Top Ad

நேற்று மாலை நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் படையினருக்கும் போராட்டக்காரர்களுமிடையில் இடம்பெற்ற மோதலில் T56 எனும் வகையை சேர்ந்த துப்பாக்கி ஒன்றும் அதிலிருந்த 60 தோட்டாக்களும் காணாமல் போயுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோதலின் போது பலர் காயமடைந்த நிலையில் இராணுவவீரர் ஒருவரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் போது இராணுவ வீரரிடம் இருந்த துப்பாக்கி ஒன்று ரவைகளுடன் தவறவிடப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கியை போராட்டகாரர்கள் எடுத்து சென்றிருக்கலாம் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.