ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை!

0
70
Article Top Ad

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று(13) நள்ளிரவிற்கு முன்னர், இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தமக்கு தொலைபேசியூடாக அறிவித்திருந்ததாக சபாநாயகர் கூறினார்.

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சபாநாயகர்,இந்த தருணத்தில் தாம் மிகுந்த அழுத்தத்தில் உள்ளதாகவும் விரைவில் இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் கூறினார்.

தற்போது பதில் ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியை விட்டுச் சென்றதாகக் கருதி மேற்கொள்ளக்கூடிய சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

இதுவரை ஜனாதிபதி தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்காத காரணத்தினால், நாளைய தினம் பாராளுமன்றத்தை கூட்டுவதிலும் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி இன்னமும் மாலைதீவுகளில் தங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.