அவசர நிவாரண திட்டம் ; பதில் ஜனாதிபதி ரணில் முக்கிய தீர்மானம்!

0
97
Article Top Ad

பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

நிவாரணம் வழங்குவதற்காக ஓகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் மேலதிக நிதியை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) காலை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் உரங்களை முறையாகவும் உடனடியாகவும் வழங்குவதற்கும் இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த கலந்துரையாடலில், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு பதில் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இக்கலந்துரையாடலின் போது வர்த்தகர்கள் தமது தொழிலை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு தேவையான சூழலை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து செயற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கவுள்ளதாக பதில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.