மக்களின் கேள்வியை பூர்த்தி செய்ய நடவடிக்கை ; லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு

0
126
Article Top Ad

நாட்டில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் 50 வீதத்தை இந்த மாத இறுதியளவில் நிறைவு செய்ய முடியும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விநியோகம் தற்போது நாட்டின்பெரும்பாலான பிரதேசங்களில் இடம்பெறுகிறது. மேல் மாகாணத்தில் எரிவாயுவின் தேவை குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களுக்கு லிற்றோ எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை 3 நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.