எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் குறைய வாய்ப்பு!

0
88
Article Top Ad

எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாதாந்திர எரிபொருள் திருத்தம் இன்றிரவு அறிவிக்கப்படவுள்ளது. உலகளாவிய சந்தை விலைகளின் தற்போதைய போக்கு எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் மேலும் குறைவதைக் குறிக்கிறது.

கடந்த வாரம், எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அடுத்தவார எரிபொருள் விலை திருத்தத்தின் விளைவாக எரிபொருள் விலை குறையலாம் என்று கூறியிருந்தார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதி இரவு எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ காஸ் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.