எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி!

0
88
Article Top Ad

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (11) கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.

அத்துடன் 19ஆம் திகதி பிரித்தானியாவில் இடம்பெறும் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியம் செல்வதாக ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.