எலிசபெத் மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி ரணில்

0
68
Article Top Ad

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அவர்களுடன் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவும் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தினார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் நண்பகல் லண்டனை சென்றடைந்தார்.

இன்று (19) லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, புதன்கிழமை (21) நாடு திரும்பவுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.