ரஸ்யா – இலங்கை இடையே விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

0
204
Article Top Ad

மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான Aeroflot விமான சேவைகள் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய ஆலோசனைக்கு அமைய ஏரோஃப்ளோட் விமான சேவையின் நிபந்தனைக்கு இணங்கி சேவைகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.