தேசிய சபையின் முதலாவது கூட்டம் நாளை!

0
65
Article Top Ad

தேசிய சபையின் ஆரம்பக் கூட்டம் நாளை (செப். 29) பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் காலை 10.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

பிரதமர் தினேஸ் குணவர்தனவின் பிரேரணையின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை செப்.23ஆம் திகதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

தேசிய கவுன்சில் என்பது அந்தந்த அரசியல் கட்சிகளின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.