சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

0
76
Article Top Ad

எரிபொருளை இறக்குமதி செய்ய அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மூடப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில்போதுமான அளவு இருப்புக்கள் இருப்பதாலும், சுத்திகரிக்கப்பட்ட பொருட்களுக்கான வாராந்திர அந்நிய செலாவணி தேவைகளை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளதாலும், சுத்திகரிக்கப்பட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்காது என்றார்.