தடைகளை தாண்டியது இலங்கை அணி ; அடுத்த என்ன?

0
83
Article Top Ad

அவுஸ்ரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலக கிண்ண தொடரில் அடுத்த சுற்றுக்கு இலங்கை அணி முன்னேறியுள்ளது.

இன்று நொதர்லாந்து அணியுடனான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு தெரிவானது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நொதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதன்மூலம் இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நபிபியா அணியிடம் இலங்கை தோல்வியுற்றதால் இலங்கை ரசிகள்ர்கள் அதிர்சியடைந்திருந்த மீண்டும் இலங்கை அணி பேர்முக்கு திரும்பியுள்ளது.

என்றாலும் கடுமையான சவால்கள் நிறைந்த போட்டிகளை இலங்கை இத்தொடரில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பலம் அணிகளை இலங்கை எதிர்கொள்ள வேண்டிய தருணங்கள் பல உள்ளன.

ஆசிய கிண்ண வெற்றி தெம்பில் உள்ள இலங்கை அணி உலக கிண்ணத்தில் சாதிக்குமா எனவும் அணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.