பிரதமர் யார்? மகிந்த குடும்பத்தில் எழுந்துள்ள சிக்கல்!

0
74
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அந்த முன்னணியின் சிரேஷ்ட தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்பார் என அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட போதிலும், அமைச்சரவையில் அவ்வாறான கலந்துரையாடல் இடம்பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி தொடர்பில் மஹிந்த குடும்பத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருவதாகவும் அறியமுடிகிறது.