பாகிஸ்தானை பந்தாடியது ஸிம்பாப்வே ; அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நிலையில் பாக்.

0
82
Article Top Ad

ஸிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மெல்போர்னில் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஸிம்பாப்வே அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது திணறியது. இறுதியில் ஒரு ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸிம்பாப்வே அணி அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றுள்ளதால் அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.