இலங்கை அணிக்கு அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளதா?

0
73
Article Top Ad

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்ப்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும் லஹிரு குமார 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 145 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் தனஞ்சய த சில்வா ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் முஜீபுர் ரஹ்மான் மற்றும் ராசித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளதா என கேள்விகள் எழுந்துள்ளன.

இரண்டு வாய்ப்புகள் இலங்கை அணிக்கு உள்ளன. அடுத்த போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்து அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

மறுபுறம் ஆப்கானிஸ்தான் அணியும் அவுஸ்ரேலிய அணியும் மோதும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிவெற வேண்டும். இந்த இரண்டு நிகழ்வுகளும் இடம்பெற்றால் மாத்திரமே இலங்கை அணியால் அரையிறுதிக்குள் நுழைய முடியும்.