கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ; கடும் வாகன நெரிசல்!

0
73
Article Top Ad

அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடலான ‘அறகலய’ இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் குழுவினர் இன்று மாலை ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகியுள்ளதுடன் ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானை சந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று இந்த பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராளிகள் குழுவினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பேரணி இன்று பிற்பகல் 03 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் ஆரம்பமானத்துடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி பேரணி சென்றுக்கொண்டுள்ளது.

போராட்டத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிக்கவில்லை.

என்றாலும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளன.

ஆர்ப்பாட்ட பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் இணைத்துக்கொண்டுள்ளார். அக்கட்சியின் ஏனைய முக்கிய உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டுள்ளனர்.