பிரித்தானியப் பிரதமரின் இலங்கைக்கான வர்த்தகத் தூதுவர் உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபட்டார்!

0
78
Article Top Ad

நவம்பர் 09 முதல் 11ஆம் திகதிவரை மூன்று நாள் பயணமாக கொழும்பை வந்தடைந்த பிரித்தானியப் பிரதமரின் இலங்கைக்கான வர்த்தகத் தூதுவர், லார்ட் டேவிஸ் ஆஃப் அபர்சோக், தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பிரித்தானியா நோக்கி செல்கிறார்.

இந்த விஜயத்தின் போது, ​​லார்ட் டேவிஸ் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கையின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு நிலப்பரப்பு, மற்றும் நிலையான பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பாதையை ஆதரிப்பதற்கான சீர்திருத்தங்கள் மற்றும் எளிதாக வியாபாரம் செய்வதை மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.