அரசாங்கத்தில் இணைய தயாராகும் ராஜித ரணிலுக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கள்!

0
78
Article Top Ad

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே தீர்வு காண முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களான சஜித் பிரேமதாச, ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரம் கிடைத்தாலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என அனைவரும் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உதவாமல் ஏன் எதிர்க்கட்சியில் இருக்கின்றீர்கள் என அவர்களிடம் கேட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.