நல்லூரில் திலீபனின் நினைவாலயம் முன்பாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்!

0
85
Article Top Ad

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் நேற்றுமுன்தினம் மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன் அவை நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன.

தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்துக்கு முன்பாக உள்ள பகுதிகளில் யாழ். மாநகர சபையின் அனுமதியைப் பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.

மாவீரரின் பெற்றோரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு கல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்றுமுன்தினம் (21) ஆரம்பமானது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரைப் போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, நவம்பர் 27 ஆம் திகதி, ‘மாவீரர் நாள்’ அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.