ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்தை கூட்ட மைத்திரிக்கு அதிகாரம் இல்லை!

0
66
Article Top Ad

நவம்பர் 30ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அழைக்கப்பட்ட செயற்குழு கூட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மஹிந்த அமரவீர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

செயற்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு முன்னாள் அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய அமரவீர, சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில் அதற்கான அதிகாரம் தமக்குத்தான் உள்ளது என்றார்.

மைத்திரிபால சிறிசேனவினால் கூட்டப்பட்ட செயற்குழு கூட்டம் சட்டத்திற்கு புறம்பானது மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பை உடனடியாக இடைநிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதியை வலியுறுத்திய அமரவீர, கூட்டத்தை நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக திலங்க சுமதிபால அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.