பாடசாலைகளுக்கு நாளைமுதல் இரண்டாம் தவணை விடுமுறை!

0
82
Article Top Ad

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் (01) முடிவடைவதுடன் மூன்றாம் பாடசாலை தவணை எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாம் தவணைக்கான முதற்கட்டமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, நத்தார் பண்டிகை காரணமாக எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உயர்தரப் பரீட்சை காரணமாக எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாகவும், 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணைக்கான இறுதிக் கட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் மார்ச் 24 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.